தொடர்ந்து சரியும் நோட்டா வாக்கு சதவீதம்
5 May 2026, 10:21 pm
<p><strong>தொடர்ந்து சரியும் நோட்டா வாக்கு சதவீதம்</strong></p><p>சென்னை, மே 5 - ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், நோட்டா எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற வாய்ப்புக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. </p><p>கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு முன் எந்த வேட்பா ளருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள் அதற் கான படிவம் 49ஓ (Form 49O)-வை நிரப்பி தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கும் வசதி இருந்தது. </p><p>ஆனால் ஓட்டுரிமை ரகசியம் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத் தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் 11 அக்டோபர் 2013 முதல் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது.</p><p> தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கொண்டு வரப்பட்டுள்ள நோட்டா (NOTA - None of the Above) என்ற பட்டன் இந்த 49-ஓ விதியின் நீட்சியாகும். </p><p>2013-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் களில் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தில்லி மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் நோட்டா முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. </p><p>அதே நேரம் தமிழ்நாட்டில் முதன்முதலில் 2013 டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை முதல் முறையாக 2014-இல் பயன்படுத்தப்பட்டது. </p><p>இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 0.75% நோட்டாவிற்கு கிடைத் தது. </p><p>ஆனால் தற்போது (23.04.2026) நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 0.41% வாக்காளர்கள் மட்டுமே நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர். </p><p>1,99,801 பேர் இந்த தேர்தலில் நோட்டாவிற்கு வாக் களித்து உள்ளனர். அதேபோல் தேர்தல் ஆணைய புள்ளிவிவரப் படி கடந்த 3 மக்களவைத் தேர்தல்களிலும் நோட்டா விற்கு வாக்களிப்போரின் எண்ணிக்கை படிப்படி யாக குறைந்து வருகிறது.</p><p> கடந்த 2014-இல் நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் 1.08 சதவீதமாக இருந்த நோட்டா, 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது 0.99 சதவீதமாக குறைந்தது.</p>
