வரலாற்றிசிரியர் கே.என்.பணிக்கர் மறைவு;தமுஎகச மாநிலக்குழு இரங்கல்
9 Mar 2026, 2:05 pm
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">வரலாற்றிசிரியர் கே.என்.பணிக்கரின் மறைவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கல் இரங்கல் தெரிவித்துள்ளது.</span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">இதுகுறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:</span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">இந்திய நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களில் ஒருவரும்</span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">, மதச்சார்பற்ற கருத்துகளைத் தொடர்ந்து எழுதியும் உரையாடியும் வந்தவருமான முனைவர் கே.என். பணிக்கர், முதுமையின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு 09.03.2026 திங்கள்கிழமை காலை அவரது 90ஆவது வயதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.</span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">கே.என். பணிக்கர் அவர்களின் அறிவியல் மனப்பான்மை கொண்ட ஆழ்ந்த ஞானமும்</span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">, வரலாற்றை வகுப்புவாதமாக்குவதற்கு எதிரான தரவுகளைக் கூர்மையாக முன்நிறுத்தும் அவரது பொறுப்புமிக்க பணிகளும் நம்மை வியக்க வைக்கக்கூடிய செயலாகும்.</span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">கேரளாவின் குருவாயூரில் </span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">1936ஆம் ஆண்டு பிறந்தவர், கண்டியூர் நாராயண பணிக்கர் (எ) கே.என்.பணிக்கர். கேரளாவின் சிறிய வகுப்பறையில் தொடங்கிய அவரது கல்வி, ராஜஸ்தானில் தொடர்ந்தது. அதன் பிறகு சென்னையில் உயர் கல்வியை முடித்தவர், தனது கல்வி மற்றும் அறிவாற்றல் மூலமாக நவீன இந்திய வரலாற்றுத் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.</span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">புதுதில்லியில் உள்ள</span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">, புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) நவீன வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய கே.என்.பணிக்கர், ஜே.என்.யூவில், வரலாற்று ஆய்வுகளுக்கான உலகத் தரம் வாய்ந்த மையம் ஒன்றை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார். ஓய்விற்குப் பிறகும், அவர் பல்கலைக்கழகத்துடன், ஓய்வு பெற்ற பேராசிரியராகத் தொடர்ந்து செயலாற்றினார். </span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">பணிக்கர் அவர்கள் "ஒரு வரலாற்றாசிரியர் என்பவர் ஒரு அறைக்குள் சுருங்கிவிடக்கூடாது</span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">, அவர்கள் பொதுமக்களுடன் ஊடாட வேண்டும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான பணியில் ஈடுபட வேண்டும், சமூகப் பொறுப்பு மிக்க செயலூக்கம் உள்ள ஒருவராக இருக்க வேண்டும்" என்று சொல்லி வந்தார். </span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில்</span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">, "பாடப்புத்தகங்களை காவிமயமாக்கும்" நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அதற்கு எதிரான தேசிய அளவிலான விவாதத்தை முன்னெடுத்தவர்களில் முன்னணியில் இருந்தவர் பணிக்கர். வரலாற்றை புராணக் கதைகளைக் கொண்டு கட்டமைக்க முயன்ற போது, அவை உண்மையின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.</span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">ஓய்விற்குப் பிறகு தனது சொந்த மாநிலமான கேரளாவுக்குத் திரும்பியவர்</span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">, மாநிலத்தின் அறிவுசார் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார். காலடியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். அங்கு அவர் பாடத்திட்டத்தை நவீனமயமாக்கவும், துறைகளுக்கு இடையேயான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் செயலாற்றினார்.</span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">பின்னர்</span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">, கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (KCHR) தலைவராகவும், கேரளத்தின் உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தும் திட்டங்களின் தலைவராகவும் செயல்பட்டார். கேரள மாநில உயர்கல்வி கவுன்சிலின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றினார், கேரள மாநிலத்தில் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஜனநாயகப்படுத்தவும், மேம்படுத்தவும் பணியாற்றினார்.</span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">வகுப்புவாதத்தை எதிர்ப்பதற்கான பல கையேடுகளை உருவாக்குவதில் அவர் முன்னோடியாக இருந்தார். அந்தக் கையேடுகள் பலவும் தமிழ் வாசகப் பரப்பில் பரவலாக அறியப்பட்டதாகும்.</span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">கே.என்.பணிக்கரின் பல உரைகளை பல்வேறு மேடைகளில் நாம் கேட்டிருந்தாலும்</span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">, விருதுநகரில் நடைபெற்ற தமுஎகச 12ஆவது மாநில மாநாட்டிலும், புதுச்சேரி பிரஞ்சு ஆய்வு மையத்தோடு தமுஎகச இணைந்து நடத்திய பயிலரங்கிலும் நம் அமைப்பின் நேரடிக் கருத்தாளராக கே.என்.பணிக்கர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர தமுஎகசவின் அறிக்கைகள் பலவற்றில் அவரது கருத்துகளை முன்வைத்து நாம் விவாதித்துள்ளோம். </span></span></span></span></p>
<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span dir="ltr" lang="TA" style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">இவ்வாறு தனது வாழ்வில் வலதுசாரி கருத்தியலை அம்பலப்படுத்தி </span></span><span style="font-size:12.0pt"><span style="font-family:"Latha",sans-serif">70ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றிய கே.என்.பணிக்கர் அவர்களின் மறைவு, இந்திய இடதுசாரி அறிவுசார் மரபின் பேரிழப்புகளில் ஒன்றாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் தமுஎகச ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</span></span></span></span></p>
<p> </p>
