முந்தய பக்கம்

SIR படிவத்தை சமர்ப்பிக்க அவகாசம் நாளையுடன் முடிவு!

10 Dec 2025, 7:40 am
SIR படிவத்தை சமர்ப்பிக்க அவகாசம் நாளையுடன் முடிவு!
<p>வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான(SIR) படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன்(டிச.11) முடிவடைகிறது.&nbsp;<br /> வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான படிவங்கள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இந்த படிவத்தை நிரப்புவதில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் இருந்தன. இதில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டிகளை முன்வைத்துவருகின்றனர்.<br /> இந்நிலையில் SIR படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் டிசம்பர் 4 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கால அவகாசம் வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் டிசம்பர் 11 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசமானது நாளையுடன் முடிவடைகிறது.<br /> மேலும் வருகின்ற 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram