தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

25 Mar 2026, 5:29 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p>வேட்புமனு தாக்கல் செய்ய &nbsp;4 நாட்கள் மட்டுமே அவகாசம்! சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. தேர்தல் அறி விக்கை வெளியிடும் நாளான மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 &nbsp;வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு &nbsp;தாக்கல் செய்யலாம். இருப்பினும், 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் &nbsp;கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 31 (செவ்வாய்), ஏப்ரல் 1 (புதன்), ஏப்ரல் 3 (வெள்ளி) மற்றும் ஏப்ரல் 5 (ஞாயிறு) ஆகிய நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய &nbsp;இயலாது.&zwnj; மார்ச் 30, ஏப்ரல் 2, 5 மற்றும் 6 ஆகிய நான்கு நாட்கள் &nbsp;மட்டுமே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என்று &nbsp;தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் &nbsp;செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 6 (திங்கள்) ஆகும். விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி &nbsp;வழங்கியுள்ளது. அதோடு, என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட தவெகவின் 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ராமதாஸ் புதிய கட்சி சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு, அய்யா &nbsp;பாசறை மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கு வதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கட்சியின் சுருக்கப் பெய ராக அய்யா பாமக என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மஜக, எஸ்டிபிஐ, கருணாஸ் கட்சிகளுக்கு தலா 1 இடம்! &nbsp;சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் புதிதாக இணைந்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி, &nbsp;எஸ்டிபிஐ, நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரியும், நடிகர் கருணா ஸூம், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் &nbsp;தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத் தக்கது. அதேபோல எஸ்டிபிஐ கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக &nbsp;கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. தற்போது அக்கட்சி &nbsp;திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. எரிவாயு முன்பதிவில் மாற்றமில்லை! சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) முன்பதிவு &nbsp;செய்யும் கால இடைவெளி நகர்ப்புறங்களில் 25 நாட்கள், &nbsp;கிராமப்பகுதியில் 45 நாட்கள் என்ற அறிவிப்பில் எந்த &nbsp;மாற்றமும் இல்லை என பெட்ரோலிய அமைச்சகம் &nbsp;தெரிவித்துள்ளது.</p> <p><strong>சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கேள்வி!</strong></p> <p>சென்னை, மார்ச் 25 - தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், தமது &lsquo;எக்ஸ்&rsquo; தளத்தில் கடுமை யான கேள்விகளை எழுப்பியுள்ளார். &ldquo;கோவிட் காலத்தைப் போல&rdquo; என &nbsp;பிரதமர் பேசியதால், ஏற்கெனவே எரி வாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் &nbsp;மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு &nbsp;தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை &nbsp;ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இத்தகைய தீவிர பிரச்சனை களுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய அரசு, மக்கள் கவனத்தைத் திசைத்திருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை விவகாரத்தை இப் போது முன்னெடுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். &nbsp;&ldquo;சிலிண்டர் வழங்குவதும், வெளி யுறவுக் கொள்கையும் மாநில அரசின் &nbsp;கையிலா இருக்கிறது? மாநில அரசு &nbsp;தன்னால் இயன்ற அத்தனை நடவடிக் கைகளையும் மேற்கொண்டுள்ளது. ஆனால், இத்தனைக்கும் பொறுப்பான &nbsp;ஒன்றிய பாஜக அரசு என்ன செய்கிறது என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி&rdquo; என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்தல் திருநங்கையர் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு &nbsp;உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் &nbsp;என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் &nbsp;இந்தப் புதிய மசோதாவால் திருநங்கை யரின் உரிமைகள் பறிபோகும் அபா யம் உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு விடுத்த கடிதத்தில், திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களாக இணைந்து 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.</p> <p>காங்கிரஸ் நிர்வாகி சஸ்பெண்ட் சென்னை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் &nbsp;கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் டி. &nbsp;செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் &nbsp;தலைவர் செல்வப்பெருந்தகை நேரடியாக இந்த நடவடிக் கையை மேற்கொண்டுள்ளார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி &nbsp;செயல்பட்டதே இதற்கான காரணம் என்று அவர் வெளியிட்ட &nbsp;அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை சென்னை: ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் எல்பிஜி மற்றும் எரிவாயுவிற்காக கூடுதல் கட்டணங்கள் வசூ லிப்பது சட்டவிரோதமானது என்று நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த &nbsp;விதிகளை மீறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.