தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

50 ஆண்டுகளாக பட்டா வழங்காத அவலம் 1 மாதத்தில் நடவடிக்கை எடுக்க சிபிஎம் தலைவர்களிடம் வட்டாட்சியர் உறுதி

12 hours before
50 ஆண்டுகளாக பட்டா வழங்காத அவலம் 1 மாதத்தில் நடவடிக்கை எடுக்க சிபிஎம் தலைவர்களிடம் வட்டாட்சியர் உறுதி
<p><strong>50 ஆண்டுகளாக பட்டா வழங்காத அவலம் 1 மாதத்தில் நடவடிக்கை எடுக்க சிபிஎம் தலைவர்களிடம் வட்டாட்சியர் உறுதி</strong></p><p>கடலூர், செப்.18-கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகரம் திருக்கண்டீஸ்வரம் 12-வது வார்டில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் கோட்டாட்சியர் மூலம் இலவச மனை வழங்கப்பட்டு,நமூனாமட்டுமே வழங்கப் பட்டுள்ளது. இது வரை இ-பட்டா வழங்கப்படாத நிலையில், உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொது மக்களுடன் இணைந்து பண்ருட்டி வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை (செப்.18) மனு அளிக்கப்பட்டது.</p><p>மனுவைப் பெற்ற வட்டாட்சியர், ஒரு மாதத்திற்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். காலக்கெடுவுக்குள் நட வடிக்கை எடுக்காவிட்டால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்தி ருப்புப் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.</p><p>இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சி நாதன், பகுதி குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், பண்ருட்டி வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.