பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்
13 Jul 2026, 12:32 am
<p><strong>பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்</strong> </p><p>கடலூர், ஜூலை 12- கடலூர் சின்னகங்கனாங்குப்பம் இமாகுலேட் மகளிர் கல்லூரியில், ‘யுவ ஆப்த மித்ரா’ திட்டத்தின் கீழ் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பயிற்சி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் வழிகாட்டுதலின்படி, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மை பாரத், பாரத் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் அமைப்புகளைச் சேர்ந்த 511 மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு ஜூலை 6 முதல் 12 வரை மூன்று மையங்களில் 7 நாள் உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட்டது. வெள்ளம், புயல், தீ விபத்து, நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டதுடன், அடையாள அட்டை, சான்றிதழ் </p>
