அமராவதி ஆற்றில் முதலை உலா!
7 Dec 2025, 3:52 pm
<p><strong>அமராவதி ஆற்றில் முதலை உலா!</strong></p>
<p>உடுமலை, டிச.7- மடத்துக்குளம் அருகே பாயும் அமராவதி ஆற்றில் முதலை உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சம டைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, கணியூர் கடத்தூர் பிரதான சாலையிலுள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் அருகே நீரில் பெரிய அளவிலான முதலை ஒன்று படுத்திருப் பதை அவ்வழியாக சென் றவர்கள் பார்த்துள்ள னர். அதனை வீடியோவாகவும் பதிவுசெய்த நிலையில், தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வரு கிறது. தற்பொழுது சபரிமலை சீசன் என்பதால், ஆற்றில் காலை, மாலை என இருவேளையும் ஏராளமான பக்தர்கள் நீராடி வருகின்றனர். மேலும், தினசரி பொதுமக்கள் குளிப்ப தற்கு, துணி துவைப்பதற்கு மற்றும் மாடு மேய்ப்பதற்கு ஆற் றுப்பகுதிக்கு சென்று வருகின்றனர். ஆற்றில் உலா வரும் முதலையால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்துள்ள னர். எனவே, யாரையேனும் தாக்கும் முன் அதனை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்பொழுது, கடத்தூர் ஊராட்சி சார்பில் ஆற்றுப்பகுதியில் முதலை உலா வருவது குறித்து ஒலிபெருக்கியின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வரு கிறது.</p>
