‘வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தால் குற்றவியல் நடவடிக்கை’
28 Jan 2026, 2:33 pm
<p><strong>‘வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தால் குற்றவியல் நடவடிக்கை’</strong></p>
<p>தேனி, ஜன.28- சின்னமனூர் வனப்பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்துக்களைத் தடுக்க தீவிர நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி அத்துமீறி மலைப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது குற்றவியல் நட வடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் வருசநாடு, மேக மலை, கூடலூர், கம்பம், போடி, பெரி யகுளம் பகுதிகளில் அமைந்துள் ளன. ஒவ்வொரு கோடையிலும் ஏற் படும் தீ விபத்து அதிக பாதிப்யை ஏற்படுத்துகிறது. இது போன்ற நிலையைத் தடுப்ப தற்காக சின்னமனூர் வனச்சரக அலு வலகத்தில் வனப்பணியாளர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி வனப் பாதுகாவலர் சாய் சரண்ரெட்டி தலைமை வகித்தார். தீயை கட்டுப்படுத்தும் கருவிகளான பயர்மேட், தெளிப்பான், பிரத்யேக உடைகள் உள்ளிட்டவை வழங்கப் பட்டன. மேகமலை பகுதியில் தீ பரவ வாய்ப்புள்ளதால் 3 மீட்டர் அகலத்தி லும், தமிழக கேரள எல்லையோரம் 6 மீட்டர் அகலத்துக்கும் சுமார் 110 கிமீ.தூரத்துக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. விரைவில் இவை நிறைவு பெற உள்ளன என்று வனத்துறையினர் தெரிவித்தனர். தீ விபத்துக்கள் பெரும்பாலும் மனித தவறுகளாலே ஏற்படுவதால் கோடையில் அத்துமீறி வனப்பகு திக்குள் நுழைந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பயிற்சியில் சின்னமனூர், கம் பம் கிழக்கு வனச்சரகர்கள் திருமுரு கன், பிச்சைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
