மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளை, பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க சிபிஎம் வலியுறுத்தல்
22 May 2026, 11:34 pm
<p><strong>மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளை, பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, மே 22- தருமபுரி மாவட்டத்திற்குள் இயக் கப்படும் பேருந்துகளை, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. </p><p>இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக் கையில், தருமபுரி நகரில் போக்குவ ரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் பேருந்து நிலையம் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். </p><p>அதன்படி, சமீபத்தில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. </p><p>அதேசமயம், பழைய பேருந்து நிலையத்திலுள்ள சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.</p><p> எனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத் தூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்து களை, பழைய பேருந்து நிலையத்திலி ருந்து இயக்க வேண்டும் என அரசி யல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. </p><p>இக் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வா கம் போக்குவரத்தில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. </p><p>அதேபோல பென்னா கரம், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, சேலம் செல்லும் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.</p><p> இந் நிலையில், பழைய பேருந்து நிலையத் துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கும் சென்று வர வேண்டுமென சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>இதனால் நகரில் குறிப்பாக, நான்கு ரோடு அருகில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. </p><p>உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>எனவே, மாவட்டத்திற்குள் இயக்கப் படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், வெளி மாவட் டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.</p>
