முந்தய பக்கம்

குடிநீர் விநியோகம்: பிடிஐ-விடம் சிபிஎம் வலியுறுத்தல்

11 Apr 2026, 5:30 am
குடிநீர் விநியோகம்: பிடிஐ-விடம் சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>குடிநீர் விநியோகம்: பிடிஐ-விடம் சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>திருவண்ணாமலை, ஏப்.10- வந்தவாசி அடுத்த காரம் மாதவ மேலாட்டான் குப்பம் கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p><p>அப்பகுதியில் ரூ.15 லட்சத்தில் புதிய கிணறு, ரூ.5 லட்சத்தில் கைப்பம்பின் மற்றும் ரூ.7.5 லட்சத்தில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.</p><p>எனவே, உடனடியாக குடிநீர் விநியோகத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி இந்த மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் நிர்வாகிகள் அப்துல் காதர், பாசா அராபத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram