தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக வேட்பாளர் வசந்தவேலையை ஆதரித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

11 Apr 2026, 5:30 am
திமுக வேட்பாளர் வசந்தவேலையை ஆதரித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்
<p><strong>திமுக வேட்பாளர் வசந்தவேலையை ஆதரித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஏப்.10- தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத நல்லிணக்கம் தழைத்தோங்கவும் உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.ஜே. வசந்தவேலுவுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.</p><p>உளுந்தூர்பேட்டை நகரில் திருவெண்ணெய்நல்லூர் சாலையில் தொடங்கிய இந்தப் பிரச்சாரம், அண்ணா நகர், குமரன் தெரு மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகத் தொடர்ந்தது. அப்போது &#39;கலை குறிஞ்சி கலைக்குழு&#39; சார்பாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.</p><p>பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக-பாமக உள்ளிட்ட கட்சிகளின் &#39;எட்டடி&#39; கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பி. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.</p><p>இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், வி. சாமிநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. சேகர், ஏ. தேவி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.