ஜோதிடரை அரசியல் ஆலோசகராக நியமிப்பது ஏற்புடையதல்ல! - பெ.சண்முகம்
12 May 2026, 2:41 pm
<p>ஒரு ஜோதிடரை அரசு ஆலோசகராக நியமிப்பது ஏற்புடையதல்ல என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.</p><p>அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். “ஜோதிடம் தனை இகழ்” என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல! இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல. என தெரிவித்துள்ளார்</p>
