குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
3 Mar 2026, 3:38 pm
<p><strong>குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 3- குறவன் திண்ணை கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காலிக்குடங் களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் ஒன்றியம், பிக்கிலி ஊராட்சிக்குட் பட்ட குறவன் திண்ணை கிராமத்தில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்க ளுக்கு, கடந்த 4 ஆண்டுகளாக ஒகே னக்கல் குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லை. எனவே, இப்பகுதி மக்க ளுக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டத் தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கரிப்பள்ளம், கூட் டாறு பகுதியில் தோண்டப்பட்டுள்ள பொதுக் கிணறுகளிலிருந்து, புதிய குழாய் அமைத்து இக்கிராமத்தி லுள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டி மூலமாக குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி பொது மக்கள் செவ்வாயன்று காலிக்குடங்க ளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் செல்வ ராஜ், குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. மாதன், வே.விஸ்வநாதன், ஜி.சக்தி வேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சின்ன சாமி, வட்டச் செயலாளர் ஆர்.சக்தி வேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்னசாமி, நிர்வாகிகள் சின்னராஜ், சண்முகம், சிலம்பரசன், ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிராம மக்களுடன் வட் டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். கோரிக்கைகளை ஏற்று உள்ளூர் நீராதாரமான பொதுக் கிணற்றிலி ருந்து புதிய குழாய் அமைத்து, குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப் பதாகவும், அதுவரை லாரிகள் மூலம் கிராம மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.</p>
