விரல் துண்டிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
19 Dec 2025, 6:05 pm
<p><strong>விரல் துண்டிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>உடுமலை, டிச.19 - உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சின்னவீ ரம்பட்டி ஊராட்சியில், தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருபவர் மரகதம் (42). கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி வழக்கம் போல குப்பைகளை சேகரிக்கும் பணி செய்து கொண்டிருந்தார். குப்பையை இரும்பு தொட்டியில் கொட்டி யபோது, பழுதடைந்த நிலையில் இருந்த அதன் மூடி கழன்று அவரின் கைகளில் விழுந்தது. இதில் அவரின் இரண்டு விரல் கள் துண்டானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் போது, அவரது கைவிரல் நரம்புகள் கடும் சேதமடைந்தி ருப்பதால், துண்டான விரல்களை இணைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட தொழி லாளிக்கு இதுவரை, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மருத்துவ உதவியோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. எனவே, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பணியாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் குப்பை தொட்டிகளை உரிய காலத் தில் ஆய்வு செய்யாத ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரிப்பாளையம் கிளை செயலாளர் ராஜன் தலைமை ஏற்றார். உடுமலை நகரச்செயலாளர் தண்டபாணி முன்னி லையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ் பேசினார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், உடுமலை நகரக்கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
