ராஜஸ்தானில் சிபிஎம் சார்பில் ‘நீதி சபை’
16 Jul 2026, 9:05 pm
<p><strong>ராஜஸ்தானில் சிபிஎம் சார்பில் ‘நீதி சபை’</strong></p><p>பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் பத்ராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 15 அன்று ‘நீதி சபை’ என்ற பெயரில் மக்கள் போராட்டம் நடைபெற்றது. </p><p>இந்த போராட்டத்தில் அபிஷேக் சர்மாவுக்கு (படுகொலை) நீதி கிடைக்க வேண்டும் ; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் ; சீர்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு நிலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ; குடிநீர் மற்றும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் வசதியை உறுதி செய்ய வேண்டும் ; அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்டவைகளை நிறைவேற்ற மாநில பாஜக அரசுக்கு நீதி சபை கோரிக்கை விடுத்தது.</p><p> இந்தச் சபையில் சிபிஎம் ஊழியர்கள், கிராமப்புற மக்கள் என நூற்றுக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்றுத் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.</p><p>மேலும்,”எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்!” என்று சபையில் பங்கேற்றவர்கள் உறுதியாக முழக்கமிட்டனர்.</p>
