தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர மாநிலத்தில் கொடூரம் கஞ்சா விற்பனைக் குண்டர்களால் சிபிஎம் தலைவர் பென்சலையா படுகொலை

30 Nov 2025, 3:38 pm
பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர மாநிலத்தில் கொடூரம் கஞ்சா விற்பனைக் குண்டர்களால்  சிபிஎம் தலைவர் பென்சலையா படுகொலை
<p><strong>பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர மாநிலத்தில் கொடூரம் கஞ்சா விற்பனைக் குண்டர்களால் &nbsp;சிபிஎம் தலைவர் பென்சலையா படுகொலை</strong></p> <p>டிசம்பர் 2-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம்</p> <p>நெல்லூர் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு உள்ளார். இம்மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊழியரும், பிரஜா &nbsp;நாட்டிய மண்டலி என்ற கலாச்சார மக்கள் நாடகக் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் பென்சலையா (37), கஞ்சா விற்ப னைக் குண்டர்களால் படுகொலை &nbsp;செய்யப்பட்டார். பிரஜா நாட்டிய மண்டலி கலைக்குழு மூலம் கஞ்சா விற்பனை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிராக தெருக்கூத்து முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். தோழர் பென்சலையாவின் நாட கங்களுக்கு ஆந்திர மக்கள் நல்ல &nbsp;வரவேற்பும், பாராட்டும் தெரிவித்து &nbsp;வந்தனர். இந்நிலையில், தோழர் பென்ச லையா வெள்ளிக்கிழமை அன்று (நவ., 28) தனது குழந்தைகளின் முன்னிலையிலேயே கஞ்சா விற்ப னைக் குண்டர்களால், கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். நவம்பர் 30 அன்று (ஞாயிறு) விஜயவாடாவில் பெஞ்சலையாவின் குழுவினர் &ldquo;யோகி வேமனா&rdquo; என்ற பெயரில் கஞ்சா எதிர்ப்பு நாடகத்தை நடத்த &nbsp;திட்டமிடப்பட்டிருந்ததற்கு ஒரு நாள் முன்னதாக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழர் பென்சலையாவின் படு கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. சிபிஎம் ஆந்திரப் பிரதேச &nbsp;மாநிலச் செயலாளர் வி.ஸ்ரீனிவாச ராவ், நெல்லூர் மாவட்ட செயலா ளர் எம்.ரமேஷ் உள்ளிட்ட சிபிஎம் &nbsp;தலைவர்கள், கட்சி ஊழி யர்கள் தோழர் பென்சலையா வின் உடலுக்கு நேரில் அஞ்சலி &nbsp;செலுத்தினர். தொடர்ந்து செங் கொடி மற்றும் படுகொலைக்கு எதிர்ப்பு பதாகைகளுடன் நூற்றுக்க ணக்கான பங்கேற்ற இறுதி ஊர்வ லத்திற்கு பின்பு தோழர் பென்ச லையாவின் உடல் அடக்கம் செய் &nbsp;யப்பட்டது. தோழர் பென்சலையாவின் குடும்பத்தினருக்கு உறுதியான ஆதரவு அளிப்போம் என உறுதி யளித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் வி.ஸ்ரீனிவாசராவ்,&rdquo;அனைத்துக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 2-ஆம் தேதி சிபிஎம் &nbsp;சார்பில் நெல்லூர் மாவட்டத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும்&rdquo; என அறிவித் துள்ளார். குற்றவாளி சுட்டுப்பிடிப்பு இதற்கிடையே தோழர் பென்ச லையாவை கொன்ற முக்கிய குற்றவாளியான ஜேம்ஸ் என்பவர் &nbsp;நெல்லூர் ஹவுசிங் போர்டு காலனி &nbsp;அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்க, நெல்லூர் ஆய்வாளர்கள் வேணு, சீனிவாச ராவ் தலைமையிலான தனிப்படை அங்கு சென்றது. ஜேம்ஸ் கத்தி மூலம் தாக்குதல் நடத்த காவலர் ஆதிநாராயணா பலத்த காயமடைந்தார். அவரை &nbsp;காப்பாற்ற ஆய்வாளர் சீனிவாச &nbsp;ராவ் ஜேம்ஸ் நோக்கி துப்பாக்கி யால் சுட்டார். இதில் ஜேம்ஸ் காலில் &nbsp;காயமடைந்து சுருண்டு விழுந்தார். ஜேம்ஸ் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்டது வருவதாக தனிப்படை காவல்துறை தெரிவித்துள்ளது.</p> <p><strong>குற்றவாளிகள் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்</strong></p> <p>தோழர் பென்சலையாவை கொலை செய்தது, கல்லுருப்பள்ளி வீட்டுவசதி வாரிய காலனியில் கஞ்சா மாபியாவை நடத்தி &nbsp;வரும் அரவ காமக்ஷம்மா என்ற பெண்தான் என காவல்துறை மூலம் &nbsp;தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர் கோவர்தன் ரெட்டி,&rdquo;நெல்லூர் கிராமப்புற மண்டலத்தில் தெலுங்கு தேசம் கட்சி யுடன் இணைந்து பணியாற்றும் ஒரு கஞ்சா கும்பல் தான் சிபிஎம் &nbsp;தலைவரை கொன்றுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே, &nbsp;நான் சிபிஎம் தலைவரின் வீட்டிற்குச் சென்று குடும்ப உறுப்பி னர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தேன். மேலும், &nbsp;அவர்களுக்கு அனைத்து அரசு உதவிகளையும் உறுதியளித்தேன்&rdquo; என அவர் கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.