மல்லாங்கிணறில் அடிப்படை வசதி கோரி சிபிஎம் தெருமுனைக் கூட்டம்
13 Nov 2025, 3:30 pm
<p><strong>மல்லாங்கிணறில் அடிப்படை வசதி கோரி சிபிஎம் தெருமுனைக் கூட்டம்</strong></p>
<p>காரியாபட்டி, நவ.13– விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் மல் லாங்கிணறு பேரூராட்சியில் குடிநீர், வடிகால், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து தர வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அண்ணாநகரில் வடி கால் அமைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர் களை அதிகரிக்கவும், கால் நடை மருத்துவமனைக்கு செல்லும் சாலையை தார்ச் சாலையாக மாற்றவும் கூட் டத்தில் கோரப்பட்டது. மல்லாங்கிணறு கூட்டு றவு வங்கி முன்பு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகரச் செய லாளர் பரமசிவம் தலைமை வகித்தார். மூத்த தோழர்கள் கே.ஆறுமுகம், வி.வி.இரு ளன், இராமசாமி ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித் தனர். தாலுகா செயலாளர் ஏ. அம்மாசி துவக்க உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.முருகன் சிறப்புரையாற்றினார். தாலுகா குழு உறுப்பினர்கள் சிவபாக்கியம், முத்து, செல் வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
