சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை
3 Dec 2025, 2:59 pm
<p>சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை</p>
<p>நாகப்பட்டினம், டிச.3 - நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில் பெரும் பாலான சாலைகளில் பல்வேறு பணிகளுக் காக குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளங் கள் முறையாக மூடப்படாத தால், தற்போது பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக் கிறது. மழை நீர் தேங்கியிருப்பதால், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக நாகப்பட்டினம் நகராட்சி 32 ஆவது வார்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பெரு மாள் தெற்கு வீதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. அதனை மழைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக சீர மைத்து தர வேண்டும். மழைக்காலம் முடிந்த பின்பு நகரில் சேதமடைந் துள்ள அனைத்து சாலைகளையும் சரிசெய்து புதிய சாலைகளாக அமைத்துத் தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நாகை நகரக் குழு சார்பாக நாகை நகராட்சி மற்றும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள் கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப் பட்டினம் நகரச் செயலாளர் க.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
