பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்!
15 May 2026, 11:25 am
<p>பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முக வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;</p><p>ஒன்றிய பாஜக அரசால் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சங்கிலித் தொடர் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.</p><p>புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கி, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். என தெரிவித்துள்ளார்</p><p><br></p>
