தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைதியான முறையில் போராடியவர்கள் மீது கொடூர தாக்குதல் - சிபிஎம் கண்டனம்

21 Jul 2026, 6:15 pm
அமைதியான முறையில் போராடியவர்கள் மீது கொடூர தாக்குதல் - சிபிஎம் கண்டனம்
<p>தில்லி அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான கொடூர தாக்குதலை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டித்துள்ளது.</p><p>இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்</p><p>&quot;மாணவர் அமைப்புகளின் ஆதரவுடன், நாடாளுமன்றத்தை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணிக்காக ஜந்தர் மந்தரில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களையும் இளைஞர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பாராட்டுகிறது.</p><p>ஒன்றிய கல்வித்துறையின் தோல்விக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தின் மீது மோடி அரசு காட்டிய சர்வாதிகாரப் போக்குக்கு, அந்தப் பெருந்திரள் கூட்டம் தகுந்த பதிலடி அளித்தது.</p><p>தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சு நடவடிக்கைகளை கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.</p><p>ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய கடுமையான தாக்குதல்களில் மாணவர்களும், இளைஞர்களும் காயமடைந்தனர்; இவர்களில் சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. கோல் மார்க்கெட்டில் உள்ள சிபிஎம் தலைமையகத்திற்கு முன்பாகவும் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்று, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வு முகமையை கலைக்கவும் மோடி அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.</p><p>இந்த நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்க வேண்டும்; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; தேசியத் தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.&quot; இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.