தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச்சேகரிப்பு

10 Apr 2026, 5:30 am
பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச்சேகரிப்பு
<p><strong>பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்குச்சேகரிப்பு</strong></p><p>நாகர்கோவில், ஏப். 9- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர், இளைஞர்கள் வரவேற்பு, வாழ்த்துக்களைக் கூறி ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.</p><p>பேச்சிப்பாறை பகுதியில் வியாழனன்று வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி, பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசையை சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி சந்தித்தார்.</p><p>கோதநல்லூர், கல்குறிச்சி ஆகிய பகுதிகளில் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆதரவாக கூட்டணிக்கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலங்கள் நடைபெற்றது. திருவிதாங்கோடு, தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.