குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!
2 Apr 2026, 5:30 am
<p><strong>குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!</strong></p><p>நாகர்கோவில், ஏப். 1- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி குமரி மாவட்ட மக்கள் தலைவர்களாக வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் முன்னோடிகளான தோழர்கள் ஜி.எஸ். மணி, டி.மணி, ஜே.ஹேமச்சந்திரன், பி.திவாகரன், பி.பெருமான் ஆகியோரது நினைவிடங்களில் ஏப்ரல் 1 புதனன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.</p><p>தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்கினார். புதன்கிழமை காலை மார்த்தாண்டம் அருகில் வேட்டுமணிமண்டபத்தில் அமைந்துள்ள தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி நினைவிடங்களில் ஆர்.செல்லசுவாமி மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.</p><p>அதைத் தொடர்ந்து செருக்கோலில் உள்ள தோழர் பி.திவாகரன் நினைவிடத்திலும் திரு வட்டார அருகில் மார்தாண்டம் உள்ள தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடத்திலும், தாமரைகுளத்தில் பி.பெருமான் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.</p>
