தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!

2 Apr 2026, 5:30 am
குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!
<p><strong>குமரி மாவட்ட மக்கள் தலைவர்கள் நினைவிடங்களில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி மலரஞ்சலி!</strong></p><p>நாகர்கோவில், ஏப். 1- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி குமரி மாவட்ட மக்கள் தலைவர்களாக வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் முன்னோடிகளான தோழர்கள் ஜி.எஸ். மணி, டி.மணி, ஜே.ஹேமச்சந்திரன், பி.தியாகராஜன், பி.பெருமாள் ஆகியோரது நினைவிடங்களில் ஏப்ரல் 1 புதனன்று மலர்வணக்கம் வைத்து மரியாதை செலுத்தினார்.</p><p>தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்கினார். புதனன்று காலை மார்தாண்டம் அருகில் வேட்டுமணிமால் அமைந்துள்ள தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி நினைவிடங்களில் ஆர்.செல்லசுவாமி மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.</p><p>அதைத் தொடர்ந்து செருக்கல்லில் உள்ள தோழர் பி.தியாகராஜன் நினைவிடத்திலும் திரு வட்டார் அருகில் மாத்தூரில் உள்ள தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடத்திலும், தாமரைகுளத்தில் பி.பெருமாள் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.</p><p>அவருடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், என்.எஸ்.கண்ணன், பி.விஜயமோகனன், எம்.அகமது உசேன், கே.தங்கமோகன், வி.அனந்தசேகர், என்.ரெஜினிகுமார், ஆர்.ரெவி, மூத்த தோழர் கே.மாதவன் மற்றும் வட்டாரச் செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.