‘அரசியல் பழகுவோம்’ சிபிஎம்-இன் சிறப்பு கருத்தரங்கம்
31 May 2026, 11:07 pm
<p><strong>‘அரசியல் பழகுவோம்’ சிபிஎம்-இன் சிறப்பு கருத்தரங்கம்</strong></p><p>சேலம், மே 31- சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற சிறப்பு கருத்த ரங்கில் ஏரளாமான இளை ஞர்கள் கலந்து கொண்ட னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு சார்பில், “அரசியல் பழகு வோம்” என்னும் தலைப் பில் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிறன்று ஜெயராம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எல்.ஜி.ரமேஷ்பாபு கருத்துரையாற்றினார். தற்போது சூழலில் இளைஞர்கள் முதல் அரசியலை எவ்வாறு கையாள வேண்டும்? மற்றும் அரசியலின் தனித்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜ் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்ற னர். கோவை இதேபோன்று, கோவை மாவட்ட மார்க் சிஸ்ட் வாசகர் வட்டம் சார்பில், சனியன்று சிறப்பு கருத்தரங்கம், கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மகேஸ்வ ரன் தலைமை வகித்தார். ‘ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் அடாவடி போர் - பொருளாதார காரணிகள்’ என்ற தலைப் பில் ஆறுக்குட்டி பெரியசாமி சிறப்புரை யாற்றினார். இதில் பலர் கலந்து கொண்ட னர்.</p>
