முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள

14 Feb 2026, 4:00 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள
<p><strong>சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்</strong></p> <p>பட்ஜெட் கூட்டத்தொடரை அவசரகதியாக முடிப்பதற்கான ஒன்றிய அரசின் முனைப்பு, இந்த பட்ஜெட் ஒரு தோல்வி என்பதை அவர்களே ஒப்புக்கொள்வதை நிரூபிக்கிறது. எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களைத் தடுப்பதன் மூலம், பாஜகவினர் மக்களின் குரலை நசுக்குகிறார்கள்.</p> <p><strong>மூத்த பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்</strong></p> <p>நடைமுறையில் ஒரு நாட்டின் இறையாண்மை இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலமாக அரிக்கப்படுகிறது. இது பிரம்மாண்டமான உடன்படிக்கைகள் மூலமாக நடப்பதில்லை. மாறாக, எந்தவொரு உண்மையான உள்நாட்டு விவாதமும் இன்றி நிகழ்கிறது.&nbsp;</p> <p><strong>ஆர்ஜேடி எம்.பி., சுதாகர் சிங்</strong></p> <p>நாடாளுமன்றம் நடைபெறுவதையே மோடி அரசு விரும்பவில்லை. காரணம் விவாதம் நடந்தால் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்கள் அம்பலமாகிவிடும் என்பதை அறிந்தே நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது.&nbsp;</p> <p><strong>மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ண காந்த்</strong></p> <p>மோடி அரசு &ldquo;ஷாந்தி மசோதாவை&rdquo; சட்டமாக்கிய உடனேயே அதானி &ldquo;அட்டாமிக் எனர்ஜி லிமிடெட்&rdquo; என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன்மூலம் சட்டங்களையும் அரசியலமைப்பையும் மாற்றி அமைத்து, புதிய புதிய துறைகள் அதானியிடம் ஒப்படைக்கப்படுகின்றன என்பது அம்பலமாகியுள்ளது. மோடி ஆட்சியில் &lsquo;தனியார்&rsquo; என்றாலே அது அதானி தான், &lsquo;வளர்ச்சி&rsquo; என்றாலும் அது அதானி தான்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram