முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

23 Dec 2025, 4:05 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்</strong></p> <p>வாளையாறில் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், கேரளாவின் பன்முகத்தன்மை மற்றும் சட்ட நிர்வாகப் பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட அவமானகரமான கறையாகும். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்ட நபரை &lsquo;வங்கதேச முஸ்லிம்&rsquo; என்று கூறி, கும்பலைத் தூண்டிவிட்டது பாஜகவினர் தான்.</p> <p><strong>மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்</strong></p> <p>இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் (உ.பி., ஆதித்யநாத்) முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்புணர்வினைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். அதே சமயம் பிரதமர் மோடி இஸ்லாமிய நாடுகளிடமிருந்து மிக உயரிய குடிமை விருதுகளைப் பெறுவதில் பிஸியாக இருக்கிறார்.&nbsp;</p> <p><strong>ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஓவைசி</strong></p> <p>இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும், &lsquo;இந்து ராஷ்டிரா&rsquo; அமைப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிகழ்வுக்கு மோடி அரசு ஆதரவு அளித்துள்ளது. இதில் கலந்து கொண்ட பாஜக தலைவர்கள் &nbsp;வெறுப்புப் பேச்சுகளைக் கண்டிக்கவில்லை.&nbsp;</p> <p><strong>காங்கிரஸ் பொதுச்செயலாளர் பூபேஷ் பாகேல்</strong></p> <p>சத்தீஸ்கரின் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பாஜக இரட்டை எஞ்சின் அரசு, 21 குவிண்டால் நெல்லுக்கு நூறு கிலோ எடையைக் குறைப்பதாக குற்றம் சாட்டு எழுகிறது. இது என்ன வகையான திருட்டு.</p>
Share
FacebookXWhatsAppTelegram