முந்தய பக்கம்

மேற்குவங்கத்தில் மக்கள் ஆதரவுடன் சிபிஎம் அலுவலகங்கள் மீட்பு

9 May 2026, 9:31 pm
மேற்குவங்கத்தில்  மக்கள் ஆதரவுடன் சிபிஎம் அலுவலகங்கள் மீட்பு
<p><strong>மேற்குவங்கத்தில் மக்கள் ஆதரவுடன் சிபிஎம் அலுவலகங்கள் மீட்பு</strong></p><p>மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் பட்ஜ் பட்ஜ் பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸின் ஆக்கிரமிப்பில் இருந்த கட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களும், உள்ளூர் மக்களும் இணைந்து மீட்டுள்ளனர். </p><p>அதேபோல், பட்ஜ் பட்ஜ் தொகுதியில் உள்ள பாசுல்தங்கா பகுதியிலும் சிபிஎம் அலுவலகம் மீட்கப்பட்டுள்ளது. </p><p>மம்தா பானர்ஜியின் மருமகனும், டயமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் ஆதரவுடன், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் இந்த அலுவலகம் நீண்டகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>தற்போது உழைக்கும் மக்களும், சிபிஎம் ஊழியர்களும் இணைந்து இந்த அலுவலகத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram