தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கண்டன இயக்கம்

27 May 2026, 10:00 pm
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கண்டன இயக்கம்
<p><strong>ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கண்டன இயக்கம்</strong></p><p>சென்னை, மே 27 - தோழர் பினராயி விஜயன் இல்லத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை மற்றும் தில்லியில் போராடிய கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : கேரள மாநில முன்னாள் முதல்வரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து மத்திய அமைப்புகளை பயன்படுத்தும் பாஜகவின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் இழிசெயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, விஜூ கிருஷ்ணன், மரியம் தாவ்லே உட்பட அகில இந்திய தலைவர்கள் பலரும் தில்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் உடனடியாக கண்டன இயக்கங்களை நடத்துமாறு கட்சி அணிகளுக்கு மாநில செயற்குழு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.