தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் குறித்து உயரதிகாரியுடன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேரில் கலந்துரையாடல்

5 Dec 2025, 4:21 pm
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் குறித்து உயரதிகாரியுடன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேரில் கலந்துரையாடல்
<p><strong>அவிநாசி - அத்திக்கடவு திட்டம் குறித்து உயரதிகாரியுடன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேரில் கலந்துரையாடல்</strong></p> <p>திருப்பூர், டிச.5- அவிநாசி அத்திக்கடவு திட்ட செயல்பாடு &nbsp;குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் இந்தத் &nbsp;திட்டத்தின் சிறப்பு கண்காணிப்புப் பொறியா ளரைச் சந்தித்து விபரங்கள் கேட்டறிந்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்&zwnj;.குமார், &nbsp;மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன், அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஏ.ஈஸ்வ ரமூர்த்தி, விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு &nbsp;ஒன்றியத் தலைவர் ரங்கசாமி, செயலாளர் அப்புசாமி, அவினாசி ஒன்றிய நிர்வாகிகள் &nbsp;குமாரசாமி, கருப்புசாமி உள்ளிட்டோர் நம்பி யூர் அருகில் உள்ள எம்மாம்பூண்டியில் செயல்படும், அத்திக்கடவு அவினாசி திட்ட &nbsp;நீரேற்று நிலையம் எண்.5க்கு வெள்ளியன்று சென்றனர். &nbsp;அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் நீர் வரத்து மற்றும் நீரேற்றம் மற்றும் குளம், &nbsp;குட்டைகளுக்கு நீர் நிரப்பிய விவரம் குறித்து &nbsp;கேட்டறிந்தனர். எல் &amp; டி தனியார் நிறுவன பணி யாளர்கள் விநியோகத்தின்போது ஏற்படும் &nbsp;பழுதுகள் சீரமைப்பது மற்றும் சீராக தண்ணீர் &nbsp;விநியோகிப்பது குறித்த விவரங்களை தெரி வித்தனர். சில இடங்களில் ஓஎம்எஸ் கருவி &nbsp;மற்றும் வால்வுகளை சிலர் தன்னிச்சையாக இயக்குவது திட்டப்பணிக்கு இடையூறாக உள்ளதாக தெரிவித்தனர். இதை தொடர்பு டையவர்கள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். &nbsp;பின்பு அவிநாசியில் உள்ள நீர்வளத் துறை சிறப்புத் திட்டத்தின் வட்டக் கண்கா ணிப்பு பொறியாளர் அன்புச்செல்வத்தை சந் தித்து பேசினர். அப்போது, இந்த அத்திக்கடவு &nbsp;அவிநாசி திட்டத்தின்படி குளம், குட்டைகள் &nbsp;பலவற்றில் நீர் நிரப்பாத நிலைமைகளையும், தண்ணீரே வராத குட்டைகளைப் பற்றியும் &nbsp;தெரிவித்தனர். கண்காணிப்பு பொறியாளர், இக்கருத்துக்களை கேட்டுக்கொண்டு, &nbsp;திட் டத்தில் உள்ள 1045 குளம், குட்டைகளில் 1033-க்கு நீரேற்றப்பட்டுள்ளது என்று தெரி வித்தார். திருப்பூர் வடக்கு, அவிநாசி பகுதியில் &nbsp;குறிப்பிட்ட குட்டையில் நீர் நிரப்பப்பட வில்லை என மார்க்சிஸ்ட் கட்சி குழுவினர் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கண் காணிப்பு பொறியாளர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.