காங்கேயம் தொகுதியில் சிபிஎம் தேர்தல் பிரச்சாரம்
8 Apr 2026, 5:30 am
<p><strong>காங்கேயம் தொகுதியில் சிபிஎம் தேர்தல் பிரச்சாரம்</strong></p><p>திருப்பூர், ஏப். 7- காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், காங்கேயம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தொழிலாளர்களின் நலன் காக்கப்படும்.</p><p>இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான எனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.</p>
