குடிநீர் விநியோகம்: பிடி-விடம் சிபிஎம் வலியுறுத்தல்
11 Apr 2026, 5:30 am
<p><strong>குடிநீர் விநியோகம்: பிடி-விடம் சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>வந்தவாசி அடுத்த காரம் மாதாயில் உள்ள குப்பம் கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p><p>அப்பகுதியில் ரூ.15 லட்சத்தில் புதிய கிணறு, ரூ.5 லட்சத்தில் பைப்லைன் மற்றும் ரூ.7.5 லட்சத்தில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.</p><p>எனவே, உடனடியாக குடிநீர் விநியோகத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி இந்த மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் நிர்வாகிகள் அப்துல் காதர், பாசர் அசாபுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
