ரயில் முன் பாய்ந்து தம்பதி பலி
16 Jul 2026, 11:54 pm
<p><strong>ரயில் முன் பாய்ந்து தம்பதி பலி</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 16– திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள வடமாதிமங்கலம் ரயில் நிலையத்தில், நாச்ராபூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து தம்பதியினர் உயிரிழந்தனர். முதற்கட்ட விசார ணையில், உயிரிழந்தவர்கள் திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் – சிந்து தம்பதியினர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, தம்பதியினரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
