சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
20 Feb 2026, 2:39 pm
<p><strong>சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா</strong></p>
<p>சிவகங்கை, பிப்.20- சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனை வர் ச.அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்தார். சென்னை சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்க ளின் தலைவர் முனைவர் சேது குமணன் விழாப் பேரு ரையாற்றி, மாணவ, மாணவி யருக்குப் பட்டங்கள் வழங்கினார். முன்னாள் மாணவருமான சேது குமணன் பேசுகையில், உயர் கல்வி கற்பவரின் எண் ணிக்கை பிற மாநிலங்க ளைக் காட்டிலும் தமிழ்நாட் டில்தான் அதிகமாகும். கல்விதான் அழியாத செல்வம். ஒருவருக்கு சமு தாயத்தில் நன்மதிப்பையும் நல்வாழ்வையும் வழங்கு வது கல்வி. அத்தகைய கல்வி கற்றவருக்கும் நாட்டிற்கும் பயன் தருவதாக அமைகின்றது. இத்தகைய கல்வியைக் கற்று இன்று பட்டம்பெற்றுள்ள பட்டதா ரிகள் சமுதாயத்தில் உயர்ந்த வேலைவாய்ப்பினைப் பெறவும், பிறருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்க ளின் உரிமையாளராகவும் விளங்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார். இளநிலையில் 820 மாணவ,மாணவியருக்கும், முதுநிலையில் 321 மாணவ, மாணவியருக்கும் என மொத்தம் 1141 மாணவ, மாணவியருக்குப் பட்டங் கள் வழங்கப்பட்டன.</p>
<p> </p>
