தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஒப்பந்த முறை
23 Dec 2025, 4:05 pm
<p>தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஒப்பந்த முறை, அத்தக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சென்னையில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து செவ்வாயன்று (டிச. 23) மாவட்ட தலைவர் சௌமியா தலைமையில் ராணிப்பேட்டை வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 5ஆம் நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எழில் இளம்வழுதி, செயலாளர் வே. பர்சிலா வான சாஸ்திரி, துணை தலைவர் எஸ். சரவணன், மகளிர் துணை குழு அமைப்பாளர் ஜெ. மகேஸ்வரி, செவிலியர்கள் சங்கம் து. தலைவர் திலகாவதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.</p>
