நாளை முதல் தொடர் மழை?
12 Nov 2025, 3:20 pm
<p><strong>நாளை முதல் தொடர் மழை? </strong></p>
<p>சென்னை, நவ.12 - வங்கக் கடலில் அடுத்த டுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வுகள் உருவாகும் சாதகமான சூழ்நிலை இருப்பதால், நவம்பர் 14 முதல் டிசம்பர் 7 வரை தமிழ கத்தில் அனைத்து மாவட்ட ங்களிலும் தொடர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர். வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நவம்பர் 14 அன்று மேற்கு நோக்கி நக ரும் என்பதால் கேரளத்தில் மழை பெய்யும். நவம்பர் 16 அன்று வேதாரண்யம், இராமேஸ்வரம் பகுதியில் மழை பெய்யும். நவம்பர் 17 அன்று அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த மழை 21-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் இறுதி யில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டிசம்பர் 7ஆம் தேதி வரை யில் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
