ரூ.8.90 கோடியில் மாவட்ட மைய நூலகம் கட்டுமானப்பணி தொடக்கம்
7 Mar 2026, 2:36 pm
<p><strong>ரூ.8.90 கோடியில் மாவட்ட மைய நூலகம் கட்டுமானப்பணி தொடக்கம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 7 – திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.8 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகக் கட்டி டம் கட்டும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று தொடக்கி வைத்தார். இத்துடன் அவிநாசி அரசு மருத்துவ மனையில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சித்தா பிரிவு கட்டடக் கட்டும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. நூலகக் கட்டடம் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 18ஆயிரத்து 212 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. இது குழந்தைகள் பிரிவு, முதியோர் பிரிவு, நாளிதழ் பிரிவு, தமிழ் நூல்கள் மற்றும் ஆங்கில நூல்கள் பிரிவு, நகலிடும் பிரிவு, போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கான பிரிவு, கூட்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைகிறது. இந்த பணி தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.</p>
