தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரியில் ஆணவத்தால் கடும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ்!

6 May 2026, 1:44 am
புதுச்சேரியில் ஆணவத்தால் கடும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ்!
<p><strong>புதுச்சேரியில் ஆணவத்தால் கடும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ்!</strong></p><p>புதுச்சேரி,மே 5- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ‘ஆணவத்தால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. </p><p>புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை என்பதிலும் கூடுதல் தொகுதிகளைப் பெறுவதிலும் காங்கிரஸ்-திமுக இடையே கடும் போட்டி நிலவியது. </p><p>இதனால் இக்கூட்ட ணியே உடையும் நிலை ஏற் பட்டது.</p><p> அத்து டன் இண்டியா கூட்டணியில் காங்கி ரஸ் 16, திமுக 13, விடுதலை சிறுத்தை கள் கட்சி ஒரு இடத்தில் போட்டியிடுவ தாக வேட்பு மனுதாக்கல் நிறைவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டது. </p><p>ஆனால், இண்டியா கூட்டணி யில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் இரு இடங்களிலும், போட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். </p><p>அதிலும் திமுகவுக்கு எதிராகவே காங்கிரஸும் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. </p><p>குறிப்பாக திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் காலாப்பட்டு, ராஜ்பவன், திருபுவனை, மங்கலம், காரைக்கால் தெற்கு தொகுதிகளிலும், விசிகவுக்கு எதிராக உழவர்கரையிலும் காங்கிரஸ் போட்டியிட்டது.</p><p> அதேநேரத்தில், தொகுதி பங்கீடு, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கியதால் ஏற்பட்ட அதிருப்தியில் சற்று மனத்தாங்கலுடன் காங்கிரஸ், திமுக கூட்டணி பிரச்சாரம் நடந்தது. </p><p>இண்டியா கூட்டணியின் பிளவை மையப்படுத்தியே எதிர்த்தரப்பில் என்டிஏ கூட்டணி பிரச்சாரம் மேற்கொண்டது.</p><p> இண்டியா கூட்டணி உடன்பாடு ஏற்படாத காரணத்தால் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சி பிரமுகர்கள் போட்டி யிடும் தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்தனர். </p><p>விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கட்சி போட்டியிடும் தொகுதியிலும், செல்லும் வழியில் திமுக வேட்பாளர்கள் தொகுதியிலும் மட்டும் பிரச்சாரம் செய்தார். </p><p>இதை ஈடுகட்ட தேசிய தலை வர்களை அழைத்து வந்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது.</p><p> காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் கூட்டணியுடன் பேசி சரி செய்யத் தொடங்கினார். </p><p> இதற்கு விசிக தரப்பும் செவி சாய்த்தது. </p><p>ஆனால் இதர இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றுபடவே இல்லை. </p><p>ஒரே நாளில் புதுச்சேரிக்கு ஸ்டாலினும், ராகுலும் பிரச்சாரத்துக்கு வந்தாலும் ஒரேமேடையில் பிரச்சாரம் செய்யவில்லை.</p><p> தனித்தனியாகவே பிரச்சாரம் செய்தனர். </p><p>இண்டியா கூட்டணியிலேயே திமுகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் காலாப் பட்டில் ஷாஜகான், காரைக்கால் தெ்ற்கு ஏவிஎஸ் சக்திவேல் பிரபு, ராஜ்பவனில் குமரன், திருபுவனையில் வேலு, மங்கலத்தில் ரகுபதி ஆகிய 5 பேரும் தோல்வியடைந்தனர்.</p><p> அதேபோல் இக்கூட்டணியில் விசிகவை எதிர்த்து உழவர் கரையில் போ்ட்டியிட்ட சிவ சங்கரன் ஆகிய அனைத்து போட்டி வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். </p><p>காலாப்பட்டு, காரைக்கால் தெற்கு, ராஜ்பவன் ஆகிய மூன்று தொகுதிகளில் திமுகவே வென்றது. </p><p>ஆனால் காங்கிரஸோ கடந்த முறையை விட சரிந்து ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.