காங்கிரஸ் - பாஜக ‘கள்ள உறவு’ அம்பலம்!
20 Mar 2026, 2:55 pm
<p><strong>காங்கிரஸ் - பாஜக ‘கள்ள உறவு’ அம்பலம்!</strong></p>
<p>“திருவனந்தபுரத்தில் வாக்குகளைப் பரிமாறிக்கொள்ள காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது” என்ற அதிரடிப் புகாரை முன்வைத்து இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் என்.எஸ். நுசூர் கட்சியை விட்டு விலகியுள்ளார். கால் நூற்றாண்டுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்த இவர், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நம்பிக்கைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டீல் பேசும் தலைவர்கள் கடந்த நகராட்சித் தேர்தலிலேயே யுடிஎப் வாக்குகள் பாஜகவுக்குத் திருப்பப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நுசூர், தற்போது 1:2 என்ற விகிதத்தில் ‘வாக்கு பேரம்’ பேசப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நேமம் தொகுதியில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் வெற்றி பெறுவதற்கு ஈடாக, அருவிக்கரை மற்றும் திருவனந்தபுரம் தொகுதிகளில் காங்கிரஸை பாஜக ஆதரிக்கும் என்பதுதான் அந்த ரகசிய ஒப்பந்தம். வேட்பாளர் தேர்வில் குழப்பம் வட்டியூர்காவு தொகுதியில் கே. முரளிதரனை வெற்றி பெறச் செய்ய, அவருக்குப் போட்டியாக பாஜக ஒரு பலவீனமான வேட்பாளரை நிறுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், எஸ்.டி.பி.ஐ போன்ற அமைப்புகளின் அழுத்தம் காரணமாக வாமனபுரத்தில் தகுதியான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். “காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் கடத்தப்பட்டுவிட்டது; மதவாதச் சேற்றில் அது மூழ்கிவிட்டது” என நுசூர் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.</p>
