அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த திருப்பூரில் குழந்தைகளுக்கு மாநாடு
15 Nov 2025, 4:09 pm
<p><strong>அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த திருப்பூரில் குழந்தைகளுக்கு மாநாடு</strong></p>
<p>திருப்பூர், நவ.15- மாணவர்களிடம் அறிவியல் மனப் பான்மையை ஏற்படுத்தும் நோக்கத் துடன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெள்ளியன்று 34 ஆவது திருப் பூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத் தும் நோக்கத்துடன், மாணவர்களின் சுற் றுபுறச் சூழலில் உள்ள இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த சவால்களுக்கு அறி வியல் பூர்வமான ஆய்வுகள் மூலம் தீர்வுகளை கண்டறியும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டை கடந்த 33 ஆண்டுகளாக நடத்தி வருகின் றனர். இந்தாண்டு 34 ஆவது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திருப்பூரில் உள்ள அனைத்து ஒன்றி யங்களில் இருந்தும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், நீடித்த நிலைத்த நீர் மேலாண்மை என்ற தலைப்பின் கீழ் 120 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சமர்ப் பித்தனர். இதில், தற்போது உள்ள நீர் நிலைகளின் மாசு, அது சாரந்து பாதிப்ப டையும் பல்லுயிர் பெருக்கம் அவசியம் பற்றியும், குறிப்பாக தண்ணீர் வியாபார பண்டமாக அதிகளவில் மாறி வரும் அவல நிலையை உணர்த்தும் விதமான மாணவர்களின் ஆய்வுகள் கவனிக்க வைத்தது. இந்நிகழ்வின் துவக்க விழாவில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் ராமமூர்த்தி மாணவர்களை வாழ்த்தி அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பாராட்டி பரிசளித்தார். மேலும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் கௌரிசங்கர், நடராஜன், ராணி, கலை யரசி, இர்பான், கிருத்திகா, வளர்மதி உள்ளிட்டோரும், வழிகாட்டி ஆசிரி யர்கள், பெற்றோர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்றனர்.</p>
