தோழர் வி.மீனாட்சிசுந்தரம் 13 ஆண்டு நினைவு தினம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>தோழர் வி.மீனாட்சிசுந்தரம் 13 ஆண்டு நினைவு தினம்</strong></p>
<p>நாகப்பட்டினம், நவ.12 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், வெண்மணி களப்போராளி வி. மீனாட்சிசுந்தரம் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் அருந்தவம்புலம் கடைத்தெருவில் கிளைச் செயலாளர் பி.வீரையன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி னார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் வி. ராஜகுரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.வேணு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் அ.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் அ.சசிரேகா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதி பாசு, ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகரன், வி.ச ஒன்றியச் செயலாளர் தனபால், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் ஆர்.தங்கதுரை, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் வெ.சுந்தரி, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கே.அலெக்சாண் டர், எம்.ஆறுமுகம், செல்வராஜ், கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மீனாட்சிசுந்தரம் 13 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மரியாதை செலுத்தினார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், தமுஎகச மாவட்டச் செய லாளர் வெங்கடேசன், விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் சி.வீரசேக ரன், ஒன்றியத் தலைவர் கே.மதியழகன், விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ். முத்துசெல்வன், துணைச் செயலாளர் முல்லைவளவன், கட்சியின் மேலக்கொ ருக்கை கிளைச் செயலாளர் ஆர்.உலக நாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.</p>
