தோழர் பி.ஏ.கருப்பணன் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்
30 Dec 2025, 4:07 pm
<p><strong>தோழர் பி.ஏ.கருப்பணன் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்</strong></p>
<p>திண்டுக்கல், டிச.30- திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றி யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு உறுப்பினராகச் செயல்பட்டு மறைந்த தோழர் பி.ஏ. கருப்ப ணன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி கூட் டம், ரெட்டியார்சத்திரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற் றது. இந்த கூட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.தயா ளன் தலைமையில் நடை பெற்றது. மறைந்த தோழ ருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆர்.சச்சிதானந்தம் கலந்து கொண்டு உரை யாற்றினார். ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சக்திவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர். எஸ்.கவிதா, ஜே.எஸ்.விஜ யகுமார், சி.என்.ஆறுமுகம், ஆர்.ராஜேந்திரன் ஆகி யோர் கலந்து கொண்டனர். மறைந்த தோழர் பி.ஏ. கருப்பணன் அவர்களின் மனைவி சுப்புலட்சுமி, மகன் பாலசிந்தன் உள்பட பலர் நினைவஞ்சலி நிகழ்வில் பங் கேற்றனர்.</p>
