தோழர் மயிலை நித்யானந்தம்: முற்போக்கு இலக்கிய வானின் ‘எழுத்துச் சிற்பி’!
26 May 2026, 12:53 am
<p><strong>தோழர் மயிலை நித்யானந்தம்: முற்போக்கு இலக்கிய வானின் ‘எழுத்துச் சிற்பி’!</strong></p><p>சென்னை மயிலாப்பூரில் பிறந்து, எழுத்துக்களையே ஆயுதமாக ஏந்தி, உழைக்கும் மக்களின் விடியலுக்கா கவும் முற்போக்குச் சிந்தனைக ளுக்காகவும் தன் வாழ்நாள் முழு வதையும் அர்ப்பணித்த ஒரு மகத்தான ஆளுமை தோழர் மயிலை எம்.எஸ். நித்யானந்தம். </p><p>பத்திரிகைத் துறை, இலக்கியம், அறிவியல், திரைக்கதை எனத் தொட்ட இடமெல்லாம் முத்திரை பதித்த அந்தப் பன்முகச் சிந்தனையாளரின் நூற்றாண்டுப் பயணத்தை நெகிழ்வோடு நினைவு கூர்கிறது தமிழ்உலகம்.</p><p> தொடக்கம் முதல் தடம் வரை 1925 பிப்ரவரி 16-ம் நாள் மயிலாப்பூ ரின் மாரிச் செட்டித் தெருவில் பிறந்த நித்யானந்தம், இளமையிலேயே பொதுவுடைமைச் சிந்தனைகளா லும், சமூக மாற்றத்தின் மீதான ஆர்வத் தாலும் உந்தப்பட்டார். </p><p>1944-ல், தனது 19-வது வயதிலேயே ‘தினமணி’ ஆசிரியர் குழுவில் இணைந்து தனது பத்திரிகைப் பயணத்தைத் தொடங்கி யவர், அடுத்த நான்கு தசாப்தங்க ளுக்கும் மேலாகத் தமிழ் இதழியல் துறையின் தவிர்க்க முடியாத சக்தி யாகத் திகழ்ந்தார். </p><p>முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி 1952-ம் ஆண்டு ஜூலை 23-ல் சென்னை முற்போக்கு எழுத்தாளர் கள் சங்கம் தொடங்கப்பட்டபோது, அதன் நிறுவன உறுப்பினராகவும் நிர்வாகப் பொறுப்பாளராகவும் இருந்து, தமிழகத்தில் முற்போக்கு இலக்கியப் பயிர் செழிக்க வித்திட்ட வர் நித்யானந்தம்.</p><p> இந்த குழுவில் மு.வரதராசனார், கு.சா.கிருஷ்ண மூர்த்தி,மயிலை சீனி வெங்கடா சாமி,இரா.வெங்கடாசலம், கு.ம. பாலசுப்பிரமணியம், கணமுத்தையா, இரா.கிருஷ்ணய்யா,அம்பல வாணன், தமிழ்ஒளி,குயிலன்,ஜி.சீனி வாசன்,மு.பரமசிவம் போன்ற ஆகச்சிறந்த தமிழ் ஆளுமைகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. </p><p>தோழர் நித்யானந்தம் வெறும் எழுத்தாளராக மட்டும் நில்லாமல், மயிலாப்பூரில் 'பாரதியார் இலக்கிய மன்றம்' என்ற அமைப்பை நிறுவி, சமூக மாற்றத்திற்கான இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். '</p><p>ஆண்மை', 'அழைப்பு', 'குவிந்த கரங்கள்' என 25-க்கும் மேற்பட்ட நாவல்கள் மூலம் எளிய மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், அறிவியல் தமிழின் முன்னோடியாகவும் திகழ்ந்தார். </p><p>'நவீன உலகம்', 'அறிவியலின் ஆற்றல்' போன்ற 20-க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்கள் இவரின் அறிவுத் தேடலுக்குச் சான்று.</p><p> திரைக்கலையும் மக்கள் நாடகமும் நித்யானந்தம் அவர்களின் ‘நீதியாம் நீதி’, ‘கண்ணின் மணிகள்’ போன்ற சமூக நாடகங்கள் தமிழகம் எங்கும் 50-க்கும் மேற்பட்ட முறை மேடையேறிப் புரட்சி செய்தவை. 1</p><p>954-ல் ஜனசக்தி இதழில் தோழர் ஜீவா இவரை மனதாரப் பாராட்டியது ஒரு வரலாற்றுப் பதிவு. </p><p>பட்டுக்கோட்டையாரை அறிமுகம் செய்த பெருமை: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மேடை நாடகத்தில் நடிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், தோழர் ஜீவாவிடம் அவரைப் பரிந்துரைத்து, திரைத் துறையில் பட்டுக்கோட்டையார் தடம் பதிக்கக் காரணமாக இருந்தவர் தோழர் நித்யானந்தம் என்பது காலம் மறைக்க முடியாத உண்மை. </p><p>பத்திரிகைத் துறையின் ஆளுமை தினச்செய்தி, நவசக்தி, முரசொலி முதல் ‘இதயம் பேசுகிறது’ வரை பல இதழ்களில் உதவி ஆசிரியராகவும், இணை ஆசிரியராகவும் பணியாற் றிய இவரது உழைப்பைக் கௌரவிக் கும் விதமாக வித்வான் வே. </p><p>லட்சும ணன் அவர்கள் 'எழுத்துச் சிற்பி' என்ற பட்டத்தை அளித்தார்</p><p> பத்திரிகைத் துறையில் இவருக்கிருந்த அனுபவ மும், தெளிவும் பின்னாளில் பல இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி யாக அமைந்தது. </p><p>நூற்றாண்டு கடந்தும் நிலைக்கும் நினைவுகள் மயிலாப்பூரில் பாரதியார் பெயரில் இலக்கிய மன்றம் நடத்தி, இறுதி வரை எளிய வாழ்க்கை வாழ்ந்த இந்த மக்கள் தோழர், 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது எழுத்துப் பயணத்தை நிறைவு செய்தார். </p><p>77 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தமிழ் இலக்கியத்திற்கும், பத்திரிகைத் துறைக்கும் விட்டுச் சென்ற சொத்துக் கள் விலைமதிப்பற்றவை. மயிலை எம்.எஸ். நித்யானந்தம் போன்ற முன்னோடிகள் இட்ட பாதை யில்தான் இன்றைய முற்போக்கு இலக்கிய உலகம் நடைபயணத்தைத் தொடர்கிறது. </p><p>உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாகவும், அறிவியலின் வழிகாட்டியாகவும் திகழ்ந்த அந்த மாமனிதருக்கு நம் நெஞ்சார்ந்த செவ்வணக்கத்தைச் செலுத்து வோம்!</p>
