தோழர் அசோக் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்
14 Jun 2026, 12:53 am
<p><strong>தோழர் அசோக் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்</strong></p><p>திருநெல்வேலி, ஜூன் 12- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொரு ளாளராக செயல்பட்ட அசோக் கடந்த 2019 ஆம் ஆண்டு சாதி ஆதிக்கச் சக்தி யினரால் தச்சநல்லூர் அருகே கரையிருப்பில் படு கொலை செய்யப்பட்டார் . </p><p>தோழர் அசோக்கின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜூன் 12 வெள்ளிக்கிழமையன்று அவரது சொந்த ஊரான கரையிருப்பில் இல்லத்தின் முன்பிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேரணி புறப்பட்டது. </p><p>அவரது நினைவிடத்தில் மாலையணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. </p><p>அங்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். </p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, மாவட்ட செய லாளர் க.ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், எம்.சுடலை ராஜ், ஆர்.மதுபால், சிஐடியு மாவட்டச் செயலாளர் சரவணபெருமாள் ஆகி யோர் பேசினர்.</p><p> சிபிஎம் மாவட்ட செயற்குழு உறு ப்பினர் கே.மாரிசெல்வம், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சைலஸ் அருள்ராஜ், சமூக ஆர்வலர் முருகன் கண்ணா மற்றும் அசோக்கின் பெற்றோர்கள், தோழர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
