சமுதாய முதலீட்டு நிதி ஆணைகள் வழங்கப்பட்டன
5 Feb 2026, 3:40 pm
<p><strong>சமுதாய முதலீட்டு நிதி ஆணைகள் வழங்கப்பட்டன</strong></p>
<p>திருவண்ணாமலை, பிப்.5- ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10,000 முகாம்கள் நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று (04.02.2026) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் மகளிர் திட்டம் சார்பாகச் சமுதாய முதலீட்டு நிதிக்கான ஆணைகளை மகளிர் குழுக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் சட்டப்பேரவை குடியரசுத் துணைத் தலைவர் (துணைத்தலைவர்) கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணா துரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
