தனியார் பள்ளி வாகனங்களில் ஆட்சியர்கள் சோதனை
16 May 2026, 1:13 am
<p><strong>தனியார் பள்ளி வாகனங்களில் ஆட்சியர்கள் சோதனை</strong></p><p>ஈரோடு, மே 15- தனியார் பள்ளி வாகனங்களுக் கான வருடாந்திர கூட்டாய்வு பணி யினை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார். </p><p>ஈரோடு மாவட்டம், பவளத்தான் பாளையம், ஏஈடி பள்ளி வளாகத் தில், வட்டார போக்குவரத்து துறை யின் சார்பில் தனியார் பள்ளி வாக னங்களுக்கான வருடாந்திர கூட் டாய்வு பணி வெள்ளியன்று துவங்கி யது. </p><p>இதனை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி துவக்கி வைத்தார். </p><p>ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந் துறை, பவானி, கோபிசெட்டிபா ளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலுள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 1,096 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. </p><p>இதில் அரசின் விதி முறைகளின்படி, தனியார் பள்ளி களில் செயல்படக்கூடிய வாக னங்கள் இயக்கப்படுகிறதா? என் றும், வாகனங்களின் ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. </p><p>மேலும், மே 19 ஆம் தேதியன்று கோபி பகுதிகளிலுள்ள 60 பள்ளி களை சேர்ந்த 463 வாகனங்களுக் கும், மே 20 ஆம் தேதியன்று பவானி பகுதிகளிலுள்ள 35 பள்ளிகளை சேர்ந்த 358 வாகனங்களுக்கும் வரு டாந்திர கூட்டாய்வு நடைபெறவுள் ளது.</p><p>இந்நிகழ்வில், வருவாய் கோட் டாட்சியர் சிந்துஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான் விழி, வட்டார போக்குவரத்து அலு வலர்கள் நடராஜன், பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனசேகர், முத்துசாமி, நித்யா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். </p><p>நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் ஆயு தப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வரு டாந்திர ஆய்வு வியாழனன்று நடை பெற்றது. </p><p>நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குட்பட்ட 55 தனி யார் பள்ளிகளைச் சேர்ந்த 757 பள்ளி வாகனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்றன. </p><p>இந்த ஆய்வில் நாமக் கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்து கொண்டு, ஒவ்வொரு வாக னங்களாக நேரில் ஆய்வு மேற் கொண்டார்.</p>
