இளைஞர் கொலை: ஒருவர் கைது
4 Jun 2026, 11:02 pm
<p>கோவை, ஜூன் 4- கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த அபுதாகிர் பாஷா (27), ஜூன் 1 ஆம் தேதியன்று சிரியன் சர்ச் சாலை அருகே சாக்கடை யில் எரிந்த நிலையில் அவ ரது உடல் மீட்கப்பட்டது. அப் பகுதியில் செல்போன் உதிரி பாக கடை நடத்தி வந்த ராஜஸ் தான் மாநிலத்தைச் சேர்ந்த நர்பத் சிங் (30) என்பவரை பிடித்து போலீசார் விசாரித் தனர். அதில், கடன் பிரச்சனை யால் அபுதாகிர் பாஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசி, தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்த னர்.</p>
