தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அக்கினிச் சிறகுகளுக்கு அடியில்... ஒரு குளிர்ந்த மண்வாசம்

10 May 2026, 12:37 am
அக்கினிச் சிறகுகளுக்கு அடியில்... ஒரு குளிர்ந்த மண்வாசம்
<p><strong>அக்கினிச் சிறகுகளுக்கு அடியில்... ஒரு குளிர்ந்த மண்வாசம்</strong></p><p>தொழிற்சாலைகளின் சத்தம், எந்நேரமும் சுழலும் எந் திரங்கள், பரபரப்பான சாலைகள் - இதுதான் கோவையின் அடையா ளம். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் கோவைக்கு ஒரு புதிய வர்ணத்தைப் பூசியிருக்கிறது.</p><p> ஒருபுறம் உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, மறுபுறம் மாலையில் குளுமையூட் டும் திடீர் மழை என கோவையின் கால நிலை ஒரு கண்ணாமூச்சி ஆட்டத் தைத் தந்து வருகிறது.</p><p> இந்த விசித் திரமான வானிலை மாற்றத்திற்கு நடுவே, கோவையின் சாலைகள் இப் போது ‘குளிர்ச்சித் திருவிழா’ நடக் கும் இடமாக மாறியிருக்கின்றன. </p><p>உக்கடம் முதல் காந்திபுரம் வரை, சிங்காநல்லூர் முதல் சாய்பாபா காலனி வரை என மாநகரத்தின் எந்தப் பக்கம் திரும்பினாலும் தர்பூ சணி மற்றும் நுங்கு விற்பனை நிலை யங்கள் கண்கள் குளிரக் காட்சி அளிக்கின்றன. </p><p>சிவப்பு நிறத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தர்பூ சணித் துண்டுகள், வெயிலின் தாகத் தைத் தணிக்க வழிப்போக்கர்களை வசியப்படுத்துகின்றன.</p><p> “ஃபிரிட்ஜ் தண்ணீரை விட இதுதான் உடம்புக்கு நல்லது” எனப் பேசிக்கொண்டே லாரி ஓட்டுநர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரை தர்பூசணி கடைகளில் தஞ்சம் புகுவதை காண முடிகிறது. </p><p>இந்தக் கோடையில், கிராமத்துத் தெருக்களில் மட்டுமே ஒலித்த கம் மங்கூழ் குரல், இன்று அவிநாசி சாலையிலும், திருச்சி சாலையிலும் கம்பீரமாக கடை விரித்து காணப்படு கிறது.</p><p> மண் பானைகளில் தயிர் ஊற்றி, சின்ன வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்துப் பரிமாறப்படும் கம்மங் கூழுக்கு இளைஞர்களை ஈர்த்து வரு கிறது. </p><p>பீட்சா, பர்கர் கலாசாரத்தைத் தாண்டி, உடலுக்கு குளிர்ச்சி தரும் பாரம்பரிய உணவுகளை நோக்கி இன்றைய தலைமுறை திரும்புவது ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. </p><p>“ஒரு நுங்கு சாப் பிட்டா உடம்பே குளிர்ந்து போகு துங்க...” - இது நுங்கு விற்பனையா ளரை சூழ்ந்து நிற்கும் வாடிக்கையா ளர் ஒருவரின் திருப்தியான குரல்.</p><p> மாலையில் திடீரெனப் பெய்யும் மழை, இந்த சிறு வியாபாரிக ளுக்கு சிறு இடையூறைத் தந்தா லும், அவர்களின் உத்வேகத்தைக் குறைக்கவில்லை. </p><p>மழை வரும் போது தார்பாய் போட்டுப் பழங் களைப் பாதுகாக்கும் இவர்கள், மழை நின்ற அடுத்த ஐந்தாவது நிமி டம் மீண்டும் கடையைத் திறந்து விடு கிறார்கள். </p><p>வெயிலும் மழையும் மாறி மாறி வந்தாலும், வியாபாரம் குறை யலைங்க. </p><p>மக்கள் எப்போதுமே இயற்கையான குளிர்ச்சியை தேடித் தான் வர்றாங்க என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஒரு கம்மங்கூழ் விற்பனை யாளர். </p><p>இந்த கோடை காலம் பல எளிய குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறியிருக்கிறது. </p><p>அதிக முதலீடு இன்றி, உழைப்பை மட்டுமே மூலதன மாகக் கொண்டு, காலையில் மார்க் கெட்டில் பழங்களை வாங்கி வந்து மாலையில் விற்றுத் தீர்க்கும் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கோவை யின் பொருளாதாரத்திற்கு ஒரு சிறு பங்களிப்பைச் செய்கின்றன.</p><p> சுருக்கமாகச் சொன்னால்... கோவையின் இந்தக் கோடை வெறும் வெப்பத்தை மட்டும் தரவில்லை; மாறாக சிறு வியாபாரிகளின் உழைப்பையும், இயற்கையை நேசிக்கும் மக்களின் மனநிலையை யும் பறைசாற்றுகிறது.</p><p> சாலைகளில் தென்படும் ஒவ்வொரு இளநீர் கடை யும், நுங்கு விற்பனை வண்டியும் கோயம்புத்தூரின் தாகம் தீர்க்கும் ‘பசுமைப் புரட்சியாகவே’ காட்சி யளிக்கின்றன. வெயில் வந்தென்ன... மழை வந் தென்ன... கோவையின் வேகம் மட் டும் என்றுமே குறைவதில்லை! - ஆசாத்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.