குற்றத்தை நியாயப்படுத்தாதீர்! - அ. ராதிகா
27 May 2026, 8:45 pm
<p><strong>குற்றத்தை நியாயப்படுத்தாதீர்! - அ. ராதிகா </strong></p><p>கோவை சூலூரில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தைப் பதற வைத்துள்ளது. </p><p> ஒரு பச்சிளம் குழந்தை கொடூரமாகச் சிதைக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலிலும், சிலர் மனிதநேய மற்று நடப்பது பெரும் வேதனை.</p><p>சமூக வலைதளங்களில் சில ஆளுங்கட்சி ஆதரவாளர்கள், குற்றத்தின் தீவிரத்தைப் பேசு வதற்குப் பதிலாக ஆட்சியின் ‘இமேஜைக்’ காக்கக் குற்றத்தை மடைமாற்றுகின்றனர்.</p><p> பாதிக்கப்பட்ட தாயை இழிவுபடுத்துவதும், “அவர் மது அருந்தியிருந்தார்” என்று அவதூறு பரப்புவதும், அவரது நடத்தைக் குறித்து விவாதிப்பதும் குற்றவாளிகளை நியாயப்படுத்தும் செயலாகும். பாதிக்கப்பட்டவர்களையே குற்ற வாளியாக்கும் இந்த விஷப் பிரச்சாரப் போக்கு, நடந்த குற்றத் திற்குச் சளைக்காத பெருங்குற்ற மாகும்.</p><p> எந்த அரசாக இருந்தாலும், ஆதரவு என்ற பெயரில் இத்தகைய கொடூரக் குற்றங்களை மூடிமறைக்க முடியாது.</p><p>எனவே, பொறுப்புணர்வோடு அரசு செயல்பட வேண்டும். காவல்துறையின் அணுகு முறையும் கேள்விகளை எழுப்பு கிறது. </p><p>தாய்க்கு முழுமையாகத் தெரியப்படுத்தாமல் குழந்தை யின் உடல் அவசரமாக எரியூட்டப் பட்டதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>பெற்ற மகளைக் கடைசியாகப் பார்க்க வேண்டிய தாயின் உரிமை கூட இங்கே மதிக்கப்படவில்லையா? மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் சில அதிகாரிகள் சிரித்தபடி நடந்துகொண்ட காட்சி பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அங்கே இருக்க வேண்டியது அதி காரத்தின் பொறுப்புணர்வே தவிர, கொண்டாட்ட மனநிலை அல்ல. </p><p>குழந்தைக்காக நீதி கேட்பதை விடுத்து, தாயின் நடத்தைப் பற்றிப் பேசும் சமூகமாக நாம் மாறினால் அது சமூகத்தின் ஒட்டுமொத்தத் தோல்வி.</p><p>குற்றத்தை நியாயப்படுத்தும் அரசியலும், குற்றவாளிகளைக் காப்பாற்றும் எழுத்தும் தொடர் குற்றங்களுக்கே வழிவகுக்கும்.</p>
