மாணவர் தற்கொலை
22 May 2026, 10:14 pm
<p><strong>மாணவர் தற்கொலை</strong></p><p>மாணவர் தற்கொலை கோவை, மே 22- கோவை பிஎஸ்ஜி மருத் துவக் கல்லூரி விடுதி அறை யில் பி.பார்ம் இறுதியாண்டு மாணவர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.</p><p>அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி (22) என்ற மாணவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பி.பார்ம் (B.Pharm) நான் காம் ஆண்டு படித்து வந் தார்.</p><p>கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கித் தனது படிப்பைத் தொடர்ந்து வந்து உள்ளார். </p><p>இந்நிலையில், வெள்ளி யன்று காலை அவரது விடுதி அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்த தால் உடன் தங்கி இருந்த சக மாணவர் சந்தேகமடைந்த கதவை தட்டியுள்ளனர். </p><p>எவ் வித பதிலும் வராததால், கதவை உடைத்துப் பார்த்த போது மாணவர் பாலாஜி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. </p><p>இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தி னர், உடனடியாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். </p><p>சம் பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோ தனைக்காக கோவை சிங் காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதுகுறித்து பீள மேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>
