கல்வித்துறை உத்தரவை காற்றில் பறக்கவிடும் தனியார் பள்ளிகள் முதல் நாளிலேயே கட்டண கொள்ளைக்கு அச்சாரம்!
4 Jun 2026, 10:08 pm
<p>கோவை, ஜூன் 4-</p><p>பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, கோவையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள்</p><p>பெற்றோர்களிடம் கட்டணம் </p><p>செலுத்த கட்டாயப்படுத்துவதா</p><p>கவும், அரசின் உத்தரவை மீறி கட்டண விவரங்களை வெளியிட மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>பள்ளி வளாகத்தில் உள்ள தக</p><p>வல் பலகையில் வகுப்பு வாரியான</p><p>கட்டண விவரங்களை வெளிப்</p><p>படையாக அறிவிக்க வேண்டும் என</p><p>பள்ளிக் கல்வித்துறை திட்டவட்ட</p><p>மாக உத்தரவிட்டுள்ளது. ஆனால்,</p><p>கோவையில் உள்ள பெரும்பா</p><p>லான தனியார் பள்ளிகள் (குறிப்</p><p>பாக தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள்) இந்த உத்தரவை சற்றும் சட்டை </p><p>செய்வதில்லை என்பதே தற்போ</p><p>தைய கள நிலவரம். வெளிப்படைத்</p><p>தன்மையை உறுதி செய்யும் நோக்</p><p>கில் அரசு கொண்டுவந்த இந்த உத்தரவை, பல தனியார் பள்ளி</p><p>கள் தங்களுக்கு சாதகமாக மறைத்து விடுகின்றன. கோடை</p><p>விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே கட்டணம் கட்டச்</p><p>சொல்லி பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கி</p><p>யுள்ளன. </p><p>கல்விக் கட்டணம் மட்டுமின்றி, வளர்ச்சி நிதி, சிறப்புப் பயிற்சி,</p><p>இதர செயல்பாடுகள் எனப் பல்</p><p>வேறு பெயர்களில் கட்டணங்களை </p><p>பல மடங்கு உயர்த்தி வசூலிப்ப</p><p>தாக பெற்றோர்கள் குமுறுகின்ற</p><p>னர். இந்த கட்டண கொள்ளை குறித்து கல்வித்துறையிடம் பகிரங்</p><p>கமாக புகார் அளிக்கப் பெற்றோர்</p><p>கள் பெரிதும் தயங்குகின்றனர். நாம் புகார் அளித்தால் பள்ளி நிர்</p><p>வாகம் தங்களை குறிவைத்து, தங்கள் குழந்தைகளை பாதிப்புக்</p><p>குள்ளாக்குமோ என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணம். குழந்</p><p>தைகளின் நலன் கருதி தனிநபராக</p><p>புகார் அளிக்க தயங்குவது நியா</p><p>யம் என்றாலும், பெற்றோர்கள் ஒன்</p><p>றிணைந்து ஒரு குழுவாகக் கூட இந்த கட்டண முறைகேடுகளை தட்டிக்கேட்கவோ, புகார் அளிக்</p><p>கவோ முன்வராதது வேதனையின்</p><p>உச்சம்.</p><p>குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான கல்வியை வழங்கும் பல கல்வி நிறுவனங்கள் பல இயங்கி</p><p>வருகின்றன. இருந்தும், வெறும் பள்ளியின் பெயருக்காகவும், சமூக</p><p>கௌரவத்திற்காகவும் பல லட்சங்</p><p>களை செலவு செய்து தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்</p><p>கும் பெற்றோர்களின் மனநிலை</p><p>யும் இங்கு விமர்சனத்திற்குள்</p><p>ளாகிறது. பல்வேறு பெயர்களில் பல மடங்கு அதிகக் கட்டணம் வசூ</p><p>லிக்கப்படுகிறது என தெரிந்தும், அனைவரும் அதனை சகித்துக்</p><p>கொண்டு செலுத்தி வருவதுதான் இந்த அமைப்பின் மிகப்பெரிய அவ</p><p>லத்தின் உச்சம். பெற்றோர்களே பல நேரங்களில் தங்களை அறியா</p><p>மல் இந்த தவறை செய்கின்றனர்.</p><p>இந்த விவகாரத்தில் கல்வித்</p><p>துறை அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்கி ஆய்வுகளை மேற்</p><p>கொள்ள வேண்டும். தகவல் பல</p><p>கையில் கட்டண விவரங்களை வெளியிடாத பள்ளிகள் மீதும், முதல் நாளிலேயே கட்டண நெருக்</p><p>கடி கொடுக்கும் நிர்வாகங்கள் மீதும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் நலன் கருதி இதுபோன்ற கல்வி வியா</p><p>பாரிகளின் கட்டண கொள்ளையை</p><p>ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சத்</p><p>திற்கு கொண்டு வந்து, விழிப்பு</p><p>ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்</p><p>பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டு</p><p>மொத்த கோரிக்கையாகும்.</p>
